90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 3 கட்டமாக (செப்., 18, செப்., 25, அக்., 1) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள் ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் முக்கிய பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக் கில் குறைந்த வேட்பாளர்களை நிறுத்தி பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டுள் ளது. பள்ளத்தாக்கில் மொத்தம் 47 தொகு திகள் உள்ள நிலையில், 28 இடங்களை பாஜக தவிர்த்து வெறும் 19 தொகுதி களில் மட்டுமே கட்சி போட்டியிடுவதை பாஜக தேசிய தலைமை உறுதி செய்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேசிய தலைமையின் இந்த முடிவு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி யிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியிட ஆட்கள் இல்லை
370ஆவது சட்டப்பிரிவு ரத்து காரண மாக ஜம்மு-காஷ்மீரில் பாஜக மீது கடும் அதிருப்தி அலை உள்ளது. கடந்த காலங் களில் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக விற்கு எதிராக பிரம்மாண்ட பேரணிகள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக பள்ளத் தாக்கில் பாஜகவுக்கு செல்வாக்கு எதுவும் கிடையாது. அதே போல போட்டியிட பாஜகவிற்கு ஆட்களும் கிடைக்க வில்லை. இதனால் தான் வெறும் 19 வேட்பாளர்களுடன் பாஜக பள்ளத்தாக் கில் மூழ்கிவிட்டது. வேட்பாளர் அறிவிப்பு மூலம் தேர்தலுக்கு முன்பே ஜம்மு-காஷ் மீரில் பாஜக தோல்வியை ஒப்புக் கொள்வது போன்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.